நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில் 18,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக Disaster Management Centre தெரிவித்துள்ளது.
நேற்று (26) மாலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மே 22 முதல் 26 வரை 4,854 குடும்பங்களைச் சேர்ந்த 18,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 926 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அதிகளவு பாதிப்பு பதிவான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் காணப்படுகின்றது. அங்கு 1,389 குடும்பங்களைச் சேர்ந்த 5,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 1,571 குடும்பங்களைச் சேர்ந்த 6,773 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 9 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 69 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, காலி, புத்தளம், கொழும்பு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.





