தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்ய கொள்கை வகுக்கப்பட வேண்டும்

எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வகையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

தேவையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம், நாட்டிலுள்ள வெளிநாட்டு நாணயம் தேவையற்ற முறையில் விரயமாக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க,

“இன்று வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னர், வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை நிலையங்களில் (Sales) குவித்து வைத்துள்ளனர். இன்று இந்த நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களில் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணத்துடன், அவற்றை அதிக விலைக்கு விற்று மிக அதிக இலாபத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.”

“தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வசதி இருக்க வேண்டும். அவ்வாறு தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமே தவிர, மிகவும் கஷ்டப்பட்டு ஈட்டும் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்து, அவற்றை விற்பனை நிலையங்களில் நிறுத்தி வைத்து அதிக இலாபம் ஈட்டுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.” என்றார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore