Pope Leo XIV தனது முதல் முக்கிய கொள்கை அறிக்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து உலக நாடுகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் AI தொழில்நுட்பத்தை முற்றிலும் எதிர்க்காமல் இருந்தாலும், அது மனிதகுலத்தை ஆதிக்கம் செய்யும் வகையில் வளரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“AI தற்போது அதிகாரம், ஒதுக்கல் மற்றும் மரணத்தின் கருவியாக மாறும் அபாயம் உள்ளது. அதனை ‘disarm’ செய்ய வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
போர் சூழல்களில் AI பயன்பாடு அதிகரிப்பது, போரை மேலும் சாத்தியமானதாகவும் ஆபத்தானதாகவும் மாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
AI மூலம் இயங்கும் தானியங்கி ஆயுதங்களில் மனித முடிவெடுப்பு இல்லாமல் உயிரிழப்பு ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் AI-யை முற்றிலும் நிராகரிக்க வேண்டியதில்லை என்றும், அது மனிதநேயத்திற்கு உகந்ததாகவும் அனைவருக்கும் சமமாக கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பம் சில சக்திவாய்ந்த குழுக்களின் கைகளில் மட்டும் சிக்கினால், அது ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், AI தொழில்நுட்பத்திற்கு கடுமையான சட்டக் கட்டுப்பாடுகள், சுயாதீன கண்காணிப்பு மற்றும் தெளிவான அரசியல் பொறுப்புகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.





