மின்னல் எச்சரிக்கை: 20 மாவட்டங்களுக்கு வானிலை அபாய அறிவிப்பு வெளியீடு

இலங்கை வானிலை ஆய்வு துறை இன்று (25) கடுமையான மின்னல் அபாயம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் இந்த அறிவிப்பின் படி, ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்து நிலை (Red Alert) 4 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், நடுத்தர ஆபத்து நிலை (Amber Alert) 16 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மதியம் 1.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் ஏற்படக்கூடும் எனவும், மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை துறை தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க மக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore