அமெரிக்க தூதரகம் கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் FBI “குழு” ஒன்று விசாரணைக்காக வந்துள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது.
சமீபத்தில் சில ஊடகங்களில், இலங்கை Treasury நிதியிலிருந்து இடம்பெற்றதாக கூறப்படும் cyber theft சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவ FBI குழு இலங்கைக்கு வந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவை தவறான தகவல்கள் என அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அறிக்கையில், “இலங்கைக்கு எந்த FBI குழுவும் அனுப்பப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக, அமெரிக்க தூதரகத்தில் FBI Legal Attaché ஒருவர் இருப்பதாகவும், அது இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகளுடன் தேவையானபோது ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே இருப்பதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நுணுக்கமான பாதுகாப்பு மற்றும் விசாரணை தொடர்பான விடயங்களில் சரியான தகவலின் முக்கியத்துவம் அவசியம் எனவும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக சில உள்ளூர் ஊடகங்கள், Treasury நிதியில் US$ 2.5 மில்லியன் மற்றும் US postal தொடர்பான US$ 625,000 அளவிலான சந்தேக நிதி பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு FBI குழு வந்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





