ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய உணவுப் பொருள் விலை நெருக்கடி ஏற்படும் அபாயம் – FAO எச்சரிக்கை

Food and Agriculture Organization (FAO) வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கையின்படி, Strait of Hormuz மூடப்படுவது வெறும் கப்பல் போக்குவரத்து தடையல்ல; அது உலகளாவிய உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் மிகப்பெரிய வேளாண் மற்றும் உணவுத்துறை அதிர்ச்சியாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக FAO எச்சரித்துள்ளது.

FAO தலைமை பொருளாதார நிபுணர் Maximo Torero கூறுகையில், “நாடுகளின் தாங்கும் திறனை அதிகரித்து, இந்த அதிர்ச்சியின் தாக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக தேவை” என்றார்.

அவரின் கூற்றுப்படி, அரசுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் ஐ.நா அமைப்புகள் இணைந்து பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வேண்டும்.

FAO அறிக்கையின்படி, தற்போதைய நெருக்கடியின் தாக்கம் ஏற்கனவே உலக உணவுச் சந்தையில் தென்பட தொடங்கியுள்ளது. எரிசக்தி விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக FAO உணவுப் பொருள் விலை குறியீடு தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளது.

இந்த நெருக்கடி பின்வரும் கட்டங்களாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது:

⚡ எரிசக்தி நெருக்கடி
🌾 உரத் தட்டுப்பாடு
🌱 விதை மற்றும் உற்பத்தி சிக்கல்கள்
📉 விளைச்சல் குறைவு
💰 உணவுப் பொருள் விலை உயர்வு
📈 உணவு பணவீக்கம்

அதேவேளை, David Laborde தெரிவித்ததாவது, ஹோர்முஸ் வழியை தவிர்க்க மாற்று கடல் மற்றும் தரைப்பாதைகள் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும். ஆனால் அவற்றின் திறன் வரம்பானது என்பதால், முக்கிய உற்பத்தி நாடுகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது மிகவும் அவசியம் என கூறினார்.

FAO வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்:

🔹 மாற்று வர்த்தக பாதைகளை உடனடியாக ஏற்படுத்துதல்
🔹 உணவு மற்றும் உர ஏற்றுமதிக்கு தடைகள் விதிக்காதிருத்தல்
🔹 மனிதாபிமான உணவுதவைகளை பாதுகாத்தல்
🔹 விவசாயிகளுக்கு குறைந்த வட்டி அவசர கடன் வசதிகள்
🔹 டிஜிட்டல் விவசாய பதிவு மற்றும் மொபைல் பண பரிவர்த்தனை முறைகளை விரிவுபடுத்துதல்
🔹 சூரிய மற்றும் மின்சார அடிப்படையிலான பாசன முறைகளை ஊக்குவித்தல்
🔹 உணவுப் பாதுகாப்புக்கான பிராந்திய களஞ்சியங்களை அமைத்தல்

மேலும், எதிர்பார்க்கப்படும் El Niño காலநிலை மாற்ற தாக்கங்கள் இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் FAO எச்சரித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore