சுழல் புயல் பாதித்த அலங்கார மீன் வளர்ப்பாளர்களுக்கு ரூ. 75,000 வரை நிவாரணம்

சமீபத்தில் நாட்டை தாக்கிய ‘Ditwah’ புயலால் பாதிக்கப்பட்ட அலங்கார மீன் வளர்ப்பாளர்களுக்கு ரூ. 75,000 வரை நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று (18) கடற்றொழில், நீர்வளம் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சில் இடம்பெற்றது. இதில் துணை அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய அலங்கார மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதிய வெளிப்படையான இறக்குமதி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், வணிக தேவைக்கு ஏற்ப சட்டபூர்வமாக மீன் இனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், சிறு அளவிலான உற்பத்தியாளர்களுக்கு ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகவும் துணை அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு 2–3 மாதங்களுக்கு ஒருமுறை நேரடி கலந்துரையாடல்கள் நடத்தி துறையின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore