நீர்ப்பாசனத் துறை இன்று (10.00 மணி) வெளியிட்ட அறிவிப்பின்படி, களு ஆற்றின் குடா கங்கை உபநீர்ப்பிடிப்பு பகுதியில் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை (31) காலை 10.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் Kukule Ganga நீர்த்தேக்கத்தின் spill gates திறப்பு காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலை உருவாகக்கூடும் என கூறப்படுகிறது.
ஆபத்து உள்ள பகுதிகள்:
குடா கங்கை மற்றும் மகுரு கங்கை வெள்ளப்பரப்புகள்
புலத்சிங்ஹல, மதுராவல, பலிந்தனுவார பிரதேச செயலகப் பகுதிகள்
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வெள்ளப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





