மற்றொரு தரமற்ற நிலக்கரி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள், குறித்த நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, குறித்த நிலக்கரி கப்பல் தென்னாப்பிரிக்காவின் ‘ரிச்சர்ட்ஸ் பே கோல் டெர்மினல்’ துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், அதில் 59,766 மெட்ரிக் தொன் நிலக்கரி இருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிலக்கரி இருப்பின் சாம்பல் சதவீதம் 16.8 அலகுகளாகக் காணப்படுவதால், லங்கா நிலக்கரி நிறுவனம் கோரியிருந்த ஒப்பந்தப் பெறுமதியான 16 அலகுகளை விட அது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அபராதக் கொடுப்பனவுக்கு உட்படுத்தியோ அல்லது வேறு எந்த வகையிலோ அந்த நிலக்கரி இருப்பைக் கொள்வனவு செய்ய நிலக்கரி நிறுவனத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ‘அத தெரண’ ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் பேராசிரியர் அனுர கருணாதிலக, குறித்த நிலக்கரி இருப்பு தரத்தில் குறைவாக இருந்தபோதிலும், அதனை நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த நடைமுறைகளின்படி, தரம் தொடர்பான இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த கப்பல் விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore