Congressional Research Service வெளியிட்ட அறிக்கையின்படி, United States இராணுவத்துக்கு ஈரான் போரின் போது குறைந்தது 42 விமானங்கள் சேதமடைந்ததாக அல்லது முற்றிலும் அழிந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையில் போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட பல முக்கியமான விமானங்கள் இழப்புகளை சந்தித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் F-15E Strike Eagles, F-35A Lightning II, MQ-9 Reaper ட்ரோன்கள், KC-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் E-3 Sentry கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இழப்புகள் அனைத்தும் நேரடி போர் தாக்குதலில் மட்டுமல்லாது, தரையில் ஏற்பட்ட தாக்குதல், செயல்பாட்டு விபத்துகள் மற்றும் பிற போருடன் தொடர்புடைய சம்பவங்களிலும் ஏற்பட்டதாக அறிக்கை விளக்குகிறது.
இந்த தகவல்கள் US Department of Defense, US Central Command வெளியிட்ட தரவுகள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை முழுமையான இழப்புகளை வெளிப்படுத்தியுள்ளதா என்பது குறித்து இன்னும் உறுதி இல்லையெனவும் CRS அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த பெரும் இழப்புகள் காரணமாக, போரின் மொத்த செலவு மற்றும் இராணுவப் பாதிப்புகள் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. சில மதிப்பீடுகள் படி, சேதமடைந்த மற்றும் அழிந்த சொத்துகளின் மதிப்பு பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.





