மாவனல்லை பகுதியில் 15 வயது சிறுவனுக்கு ஓட்டப்பயிற்சி அளிக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில், 86 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு மாவனல்லை – அலுத்நுவர வீதியின் அலுபாத பகுதியில இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, குறித்த முதியவர் தனது வாகனத்தை ஓட்டி வந்து வீட்டிற்கு அருகில் நிறுத்திய பின்னர், 15 வயது சிறுவனுக்கு ஓட்டப்பயிற்சி வழங்கும் நோக்கில் வாகனத்தை இயக்க அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சமயம், வாகனத்தின் முன்பகுதியாக சாலையை கடக்க முயன்றிருந்த முதியவரை, திடீரென முன்னோக்கி நகர்ந்த கார் மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடுமையாக காயமடைந்த அவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாவனல்லை பகுதியைச் சேர்ந்த 86 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
விபத்து நேரத்தில் வாகனத்தை செலுத்திய 15 வயது சிறுவன் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இலங்கை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




