முன்னாள் SriLankan Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Kapila Chandrasena அவர்களின் பூதவுடல் தற்போது Borella Private Funeral Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa உள்ளிட்ட பலர் நேரில் சென்று மறைந்த கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தமக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.
“ஆம், நான் செல்வேன். செல்ல வேண்டியது தானே?” என அவர் தெரிவித்துள்ளார்.
Kapila Chandrasena அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 5 மணிக்கு Borella Public Cemetery யில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




