அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, 54 ஆண்டுகள் இடைவெளியில் எடுத்த பூமியின் புகைப்படங்களை ஒப்பிட்டு வெளியிட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு Apollo 17 விண்கலத்திலிருந்து எடுத்த பூமியின் படமும், 2026 ஆம் ஆண்டு Artemis II பயணத்தின் போது எடுக்கப்பட்ட புதிய படமும் ஒப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பீட்டின் மூலம், விண்வெளி ஆராய்ச்சி துறையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமியின் இயற்கை அழகு இன்னும் அதேபோலவே கவர்ச்சியாகத் தொடர்கின்றது என நாசா தெரிவித்துள்ளது.
இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, உலகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.





