வெருகல் ஆறு பாலம் அருகிலுள்ள மகாவலி ஆற்றில் ஏற்பட்ட துயரமான மூழ்கிய சம்பவத்தில் இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போன நிலையில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தந்தையும் அவரது நான்கு மகன்களும் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, திடீரென நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பியுள்ள நிலையில், மூவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் புதன்கிழமை (15) காணாமல் போனவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்கள் ஆவர். அவர்கள் கொழும்பில் வேலை செய்துவந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தாயகத்துக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.





