ஈரான் மீதான தாக்குதலை ‘சாதாரண எச்சரிக்கை’ என ட்ரம்ப் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரான் இலக்குகள் மீது அண்மையில் நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதல்களை “சிறிய எச்சரிக்கை நடவடிக்கை” (“love tap”) எனக் குறிப்பிட்டு, அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்நிறுத்தம் தொடர்ந்தும் அமலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ABC News ஊடகத்துக்கு தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை கப்பல்களைச் சுற்றி ஏற்பட்ட மோதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாதிக்கவில்லை என்றார்.

“போர்நிறுத்தம் தொடர்கிறது. அது தற்போது அமலில் உள்ளது,” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அண்மைய தாக்குதல்கள் “ஒரு சாதாரண எச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே” என்றும் கூறினார்.

இதற்கு முன்னர், United States Central Command (CENTCOM), ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணித்த அமெரிக்க போர் கப்பல்களுக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக “தற்காப்பு நடவடிக்கையாக” அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதாகவும் அறிவித்திருந்தது.

அமெரிக்க தரப்பின் தகவலின்படி, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தடுக்கப்பட்டதுடன், அமெரிக்க ராணுவ சொத்துகளுக்கு சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் தரப்பு அமெரிக்காவே போர்நிறுத்தத்தை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்க தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை இலக்காகக் கொண்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore