அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரான் அணு ஆயுதம் உருவாக்காது என ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படும் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
வியாழக்கிழமை வெளியிட்ட கருத்தில், “ஈரான் அணு ஆயுதம் பெறாதது மிகவும் முக்கியம். அதற்கு அவர்கள் வலுவாக ஒப்புதல் அளித்துள்ளனர்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா நடத்திய தாக்குதலின் போது B-2 Spirit குண்டுவீச்சுகளால் நிலத்தடியில் இருந்த அணு பொருட்களை (nuclear material) மீண்டும் ஒப்படைக்க ஈரான் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா–ஈரான் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெறக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





