அமெரிக்கா தொடர்ந்து நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கிறது – ஈரான்

Iran வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baghaei தெரிவித்துள்ளார், அமெரிக்கா தொடர்ந்து “நியாயமற்ற கோரிக்கைகளை” முன்வைத்து வருவதாக.

மேலும், அமெரிக்காவின் சமீபத்திய யுத்த நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதில் “அளவுக்கு மீறியது அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பதில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஈரானின் பதிலை நிராகரித்ததைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பாகாய் தெரிவித்துள்ளார்.

“எங்களை போராட கட்டாயப்படுத்தினால் நாங்கள் போராடுவோம். ஆனால் இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்வோம்” என அவர் கூறியுள்ளார்.

“இராஜதந்திரத்திற்கும் அதன் சொந்த விதிமுறைகள் உள்ளன. எங்களின் முடிவுகள் தேசிய நலன்களின் அடிப்படையில் இருக்கும். ஈரான் தனது மக்களின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதை நிரூபித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து Strait of Hormuz நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் முன்மொழிவு “நியாயமான கோரிக்கை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யுத்தத்தை நிறுத்துதல், அமெரிக்க தடைகள் மற்றும் கடல் கொள்ளை நடவடிக்கைகளை நீக்குதல், அமெரிக்க அழுத்தத்தால் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவித்தல் ஆகியவை ஈரானின் முக்கிய கோரிக்கைகள்” என பாகாய் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்தியத்திலும் லெபனானிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளும், பிராந்திய பாதுகாப்பிற்கான பொறுப்பான மற்றும் தாராளமான முன்மொழிவுகளாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore