இலங்கையின் உள்ளூர் சந்தையில் தங்க விலை இன்று (25) மீண்டும் உயர்ந்துள்ளது.
சந்தைத் தகவல்களின் படி, நேற்று ரூ. 385,000 ஆக இருந்த 24 கரட் தங்க பவுன் விலை, இன்று ரூ. 8,000 அதிகரித்து ரூ. 393,000 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல்,
நேற்று ரூ. 354,200 ஆக இருந்த 22 கரட் தங்க பவுன் விலை, இன்று ரூ. 361,500 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக தங்க விலையில் சரிவு காணப்பட்ட நிலையில், நேற்று குறிப்பிடத்தக்க குறைவு பதிவாகியிருந்தது.
ஆனால், உலக சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் இன்று மீண்டும் தங்க விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





