கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் எனவும், குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடி வைத்துள்ளவர் எனவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

அவர் உயிரிழந்த போது கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு (Brown) நிற ரீ-சேர்ட் அணிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore