தமிழக முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் 4,829 ‘டாஸ்மாக்’ மது கடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயி ரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக ‘டாஸ்மாக்’ இருக்கிறது.

ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றவுட`ன், தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும். இளைஞர்களைப் பாதுகாக்கவும் 65 சிறப்பு படைகள் அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார்.

விஜய் பிறப்பித்துள்ள இந்த அதிரடி உத்தரவு மூலம். ‘டாஸ்மாக்’ கடைகள் முறைப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையத்திற்கு 500 மீட்டர் எல்லைக்குள் உள்ள 717 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore