சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் Sammanthurai BAR Association, ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று 07.03.2026ம் திகதி நிந்தவூர் EFC ரெஸ்டாரண்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றும் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் பலரும் கலந்து கொண்டு இப்தார் நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே.எல். அப்துல் சலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலாளர் ஏ.ஜே.எம். நவாஸ் , உபதலைவர் ஏ.எம். நஸீல் உட்பட பொருளாளர் மற்றும் முன்னாள் தலைவர் எஸ்.எம். எம்.முஸ்தபா, உள்ளிட்ட சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள் பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர் என்பதுடன் இந்நிகழ்வானது சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





