கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), கணினி தொடர்பான நிதி குற்றங்களில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் 9 சீனப் பிரஜைகள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து புதன்கிழமை (15) இலங்கைக்கு வந்தபோது, ‘Green Channel’ வழியாக வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களைச் சோதனையிட்டபோது, உடலில் மற்றும் உடைகளுக்குள் செலோடேப் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.24 மில்லியன் மதிப்பிலான மின்னணு தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில்:
ரூ.17.5 மில்லியன் மதிப்பிலான 383 பயன்படுத்தப்பட்ட மொபைல் தொலைபேசிகள்
ரூ.6.47 மில்லியன் மதிப்பிலான 101 டேப்லெட் கணினிகள்
ரூ.30,000 மதிப்பிலான GPS டிராக்கர் கொண்ட 6 WiFi ரூட்டர்கள்
அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை இறக்குமதி விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டதால், அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்ய இலங்கை சுங்கத்துறை உத்தரவிட்டுள்ளது.





