இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகவுள்ள European T20 Premier League தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளில் ஒன்றான Dublin Guardians அணியின் உரிமையாளராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் Rahul Dravid அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, அணியின் தலைவராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் Ravichandran Ashwin நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டப்ளின் Guardians அணி, Belfast, Edinburgh, Glasgow, Rotterdam மற்றும் Amsterdam நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுடன் மோதவுள்ளது.
ஐரோப்பாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த புதிய T20 தொடர், உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




