இலங்கையில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் தேசிய அளவிலான பாதுகாப்பு மற்றும் உயிர்காக்கும் ஒருங்கிணைந்த செயன்முறையை உருவாக்குவதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (07) Parliament of Sri Lanka வளாகத்தில் நடைபெற்றது.
நீருடன் தொடர்புடைய உயிரிழப்புகளை குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பல்துறை ஒருங்கிணைந்த தேசிய கட்டமைப்பை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இந்த கலந்துரையாடலுக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் Aruna Jayasekara, பிரதி கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் Madhura Senevirathna மற்றும் பிரதி இளைஞர் விவகார அமைச்சர் Dinindu Saman Hennayake ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட அருண ஜயசேகர, நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது சமூகப் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயமாகவும் காணப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், திட்டமிட்ட பாதுகாப்பு அமைப்பு இல்லாதிருப்பது தேசிய நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்த அவர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.
அத்துடன், நீர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும், சர்வதேச மதிப்புக்கும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, மாணவர்களிடையே நீண்டகால விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் தேசிய பாடத்திட்டத்தில் நீர்ப்பாதுகாப்பு தொடர்பான கல்வியை இணைக்க முன்மொழிந்தார்.
இதேவேளை, இளைஞர்கள் உயிர்காக்கும் பணிகளில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என குறிப்பிட்ட தினிந்து சமன் ஹென்னாயக்க, தொழில்முறை மீட்புப் பணிகளுக்கு துணைபுரியும் திறமையான தன்னார்வலர் வலையமைப்பை உருவாக்க விசேட பயிற்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் Sri Lanka Navy, Sri Lanka Air Force, Sri Lanka Army, Sri Lanka Coast Guard, Disaster Management Centre, Sri Lanka Police மற்றும் Sri Lanka Life Saving Association உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு, சுற்றுலா அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.




