இணைய குற்றச்செயல் நடவடிக்கைகள்: 198 வெளிநாட்டவர்கள் கைது

இணைய குற்றச்செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் Sri Lanka Police மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 198 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 173 இந்தியர்களும் 25 நேபாள நாட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Galle, Hikkaduwa மற்றும் Midigama பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் இணைய குற்றச்செயல் நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore