அமைதியை வலியுறுத்தும் “Walk for Peace” குழுவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லஸ்–போர்த் வர்த் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கான புனிதப் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
பிரா பொன்சாய் காம்யாம் தலைமையில் புறப்பட்டுள்ள இந்த குழு, அன்பு, கருணை மற்றும் மனச்சாந்தி ஆகியவற்றை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் இந்த பயணத்தை மேற்கொள்கிறது.
இலங்கையில் புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அமைதி மற்றும் ஆன்மீக ஒற்றுமையை ஊக்குவிப்பதே இவர்களின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிக்குகள் வருகை, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும், நல்லுணர்வை வளர்க்கும் மற்றும் மக்களிடையே உள்ளார்ந்த அமைதியை ஊக்குவிக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
“இந்த பயணம் அனைத்து உயிர்களுக்கும் ஆசீர்வாதம், அமைதி மற்றும் நற்கருணையை வழங்கட்டும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.





