மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தற்போது நிலவி வரும் பலத்த மழைளுடனான வானிலையைக் கருத்திற் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தினால் இன்று (16) மாலை 4 மணியுடன் நிறைவடையும் வகையில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை, நாளை (17) மாலை 4 மணி வரை பின்வருமாறு நீடிக்கப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருக்கவும்

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க

களுத்துறை மாவட்டம்: அகலவத்த, ஹொரணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் மத்துகம

கண்டி மாவட்டம்: தொலுவ, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, உடபலாத, தெல்தொட்ட, கங்க இஹள கோரளை, அக்குரணை, பாதஹேவாஹெட்ட, பன்வில மற்றும் கங்கவட்ட கோரளை

குருநாகல் மாவட்டம்: நாரம்மல மற்றும் அலவ்வ

இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, பெல்மடுல்ல, குருவிட்ட, கிரியெல்ல, எஹலியகொட, இரத்தினபுரி மற்றும் அயகம

அபாய எச்சரிக்கை மட்டம் 1

பதுளை மாவட்டம்: ஹாலிஎல, பண்டாரவளை மற்றும் பசறை

கொழும்பு மாவட்டம்: பாதுக்க

காலி மாவட்டம்: எல்பிட்டிய, நியாகம, நெலுவ மற்றும் தவலம

கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல

களுத்துறை மாவட்டம்: இங்கிரிய மற்றும் புளத்சிங்கள

கண்டி மாவட்டம்: உடுநுவர, ஹதரலியத்த, பூஜாபிட்டிய, உடதும்பர, தும்பனை, மெததும்பர மற்றும் ஹாரிஸ்பத்துவ

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ருவன்வெல்ல, தெஹிஓவிட்ட, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, யட்டியாந்தோட்டை, கேகாலை, ரம்புக்கணை மற்றும் மாவனெல்லை

குருநாகல் மாவட்டம்: ரிதிகம

மாத்தளை மாவட்டம்: ரத்தொட்ட, அம்பன்கங்க கோரளை மற்றும் நாவுல

மாத்தறை மாவட்டம்: பிடபெத்தர

மொனராகலை மாவட்டம்: படல்கும்புர, பிபிலை மற்றும் வெல்லவாய

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை, நோர்வூட் மற்றும் கொத்மலை மேற்கு

இரத்தினபுரி மாவட்டம்: கஹவத்தை, நிவித்திகலை, எலபாத மற்றும் கொடகவெல

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore