National Development Bank PLC (NDB) வங்கியில் சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்ட உள் மோசடி விவகாரம் தொடர்பாக முழுமையான forensic audit நடத்தப்பட இருப்பதாக Central Bank of Sri Lanka அறிவித்துள்ளது.
வங்கியின் ஒத்துழைப்புடன், சர்வதேச நிபுணர்கள் கொண்ட முன்னணி வெளிநாட்டு நிறுவனம் இந்த விசாரணையை மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த audit மூலம் மோசடி நடந்த விவகாரங்கள் மட்டுமல்லாமல், அந்த காலப்பகுதியில் இருந்த கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் நிர்வாக குறைபாடுகளும் ஆய்வு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, NDB வங்கிக்கு உடனடி நடவடிக்கையாக உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாக முறைகளை வலுப்படுத்துமாறு மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், சுயாதீன மூன்றாம் தரப்பு மதிப்பாய்வும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மத்திய வங்கி, தற்போது வங்கி மூலதனம் மற்றும் திரவத்தன்மை நிலையானதாக இருப்பதாகவும், பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை முடிவுகள் நேரடியாக மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





