சமீபத்தில் நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேஷ சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது.
Public Health Inspectors’ Union பொதுச் செயலாளர் சாமில் முத்துக்குடா தெரிவித்ததாவது, ஏப்ரல் 1 முதல் 12 வரை சுமார் 2,000 சோதனைகள் நடத்தப்பட்டு, 12,000க்கும் மேற்பட்ட கடைகள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த சோதனைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்கள் விநியோகம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வரவிருக்கும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகை காலங்களிலும் இதேபோன்ற தீவிர சோதனைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.





